×

வாட்ஸ்அப் குழு மூலம் புகைப்படங்களை அனுப்பி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: பெண் புரோக்கர் உட்பட 2 பேர் கைது

சென்னை: அம்பத்தூர் சிவானந்தா நகர் மெயின் ரோடு பகுதியில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் பாலயல் தொழில் நடப்பதாக வந்த தகவலின்பேரில், விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையிலான போலீசார் அந்த மசாஜ் சென்டருக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, அண்ணனூர் செந்தில் நகரை சேர்ந்த பிரபல பெண் பாலியல் புரோக்கர் காயத்ரி (23) மற்றும் அவரது கூட்டாளியான சென்னை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (47) மற்றும் விக்னேஷ் ஆகியோர் தங்களது மசாஜ் சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை ஒன்று இணைத்து தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்து, இளம்பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அதன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் பெண் புரோக்கர் காயத்ரி, ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பின்னர் 3 பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

The post வாட்ஸ்அப் குழு மூலம் புகைப்படங்களை அனுப்பி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: பெண் புரோக்கர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sivananda Nagar Main Road ,Ambattur ,Dinakaran ,
× RELATED வேலூர்-சென்னை-செங்கல்பட்டு இடையே...